சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் கரோலினா முசோவாவை வீழ்த்திய கோகோ காப் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப், செக் குடியரசை சேர்ந்த கரோலினா முர்சோவை சந்தித்தார்.







