“எங்கள் மாஞ்சோலை பகுதியை நேரில் வந்து பார்வையிட வேண்டும் என முதல்வர் பாதம் தொட்டு கேட்கின்றேன்” என மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளி ஸ்டாலின் கூறிய வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்
பகுதிகளில் அமைந்துள்ளன மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து உள்ளிட்ட பகுதிகள்.
இப்பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகாலமாக எந்த ஒரு சாலை பணிகளும் நடைபெறாமல்
உள்ளதால் அங்குள்ள மக்கள் மிகுந்த வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள 11 வது வார்டு உறுப்பினர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை
வெளியிட்டுள்ளார் .
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வீடியோவில் அவர் கூறுகையில், எஸ்டேட் மக்களை வேண்டும் என்று அவமதிப்பதாகக் கூறி, கடந்த 10 ஆண்டுகளாக சாலை வசதிகள் எதுவும் செய்து கொடுக்காமல் உள்ளதாகக் கூறி வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் செல்லும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை ஒரு தடவை தங்கள் பகுதிக்கும் வந்து சென்று பார்வையிடுமாறும், தாங்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள் அப்போதாவது தங்களுக்குத் தெரிய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
மணிமுத்தாறு பேரூராட்சியில் 11வது வார்டில் தற்போது நடந்து முடிந்த தேர்தலில்
நின்று மாஞ்சோலை, ஊத்து பகுதிகளில் வெற்றி பெற்று வார்டு உறுப்பினராக
தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலின் திமுக கட்சியைச் சேர்ந்தவர் என்பது
குறிப்பிடத்தக்கது.
-ம.பவித்ரா