கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் அருகே குடியிருப்புகள் அதிகம் உள்ள மதில்தாணி பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு, பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரிமாவட்டம் மேல்புறத்தை அருகே மதில்தாணி என்னும் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தார் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெருவித்து வந்தாலும் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வந்துள்ளதால் தக்க நடவடிக்கை எடுக்க – மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதுபோல செல்போன் டவர் அமைக்க முறையான அனுமதியும் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியை சார்ந்த 100க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் திடீர் என இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு வந்த மார்த்தாண்டம் போலீசார் பொதுமக்களிடம் நடந்த பேச்சு வார்த்தையில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் அப்பகுதியை விட்டு சென்றனர்.