தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே ஸ்ரீ அக்குமாரியம்மன் கோயில்
சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இத்திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதிகாலை முதல் அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார்.
மேலும், 12 கிராம மக்கள் ஒன்றிணைந்து அம்மனுக்கு கூழ் ஊற்றுதல், மாவிளக்கு
ஊர்வலம், பூங்கரம் எடுத்தல், அலகு குத்துதல் , பால்குடம் எடுத்தல் மற்றும் சாமி
வேடங்கள் அணிந்தும் அம்மனுக்கு ஆடு மற்றும் கோழி ஆகியவற்றை பலியிட்டு
நேர்த்தி கடன் செலுத்தினர். இந்நிலையில் , கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள்
சாட்டை அடி வாங்கினர்.
தொடர்ந்து, வேப்பிலை மற்றும் சாட்டை ஆகியவற்றை தங்களது வீட்டிற்கு
வாங்கியும் சென்றனர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம்
மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது. மேலும், இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை
ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
—கு. பாலமுருகன்







