26.1 C
Chennai
November 29, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம்

குழந்தை தந்தையிடம் இருப்பது சட்டவிரோதம் ஆகாது- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

குழந்தை தந்தையிடம் இருப்பது சட்டவிரோதமானது ஆகாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

நெல்லையைச் சேர்ந்த ஜெயசித்ரா அமர்தநாயகம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், தனது மகனை அவரது தந்தை சட்டவிரோதமாக உடன் வைத்திருப்பதாகவும் மகனை மீட்டு ஆஜர்படுத்தக் கோரியும் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு, இந்த வழக்கை பொறுத்தவரை குழந்தை மூன்றாம் நபரின் வசம் இருப்பதாக மனுதாரர் குறிப்பிடுகிறார். ஆனால் அந்த மூன்றாம் நபர் குழந்தையின் தந்தையே. குழந்தை தந்தையிடம் இருப்பது சட்டவிரோதமானது ஆகாது. ஆகவே இந்த வழக்கை ஆட்கொணர்வு மனுவாக விசாரிக்க இயலாது. மனுதாரரை குழந்தையை பார்க்க அனுமதிக்கவில்லை என்றால் மனுதாரர் உரிய நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெறலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy