சென்னை சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் உதவி மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த ஜூலை 12ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 14ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த வாரம் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சீராக உள்ளது தற்போது முதல்வர் ஸ்டாலின் வேகமாக குணமடைந்து வருகிறார். ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 18ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். இதைத்தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் பொதுப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னை சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் உதவி மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, மையத்தைத் தொடர்பு கொண்ட கோபால் என்பவரின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின், குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, கோபால் முதலமைச்சர் ஸ்டாலினின் உடல்நலம் குறித்தும் கேட்டறிந்தார். குறைதீர்க்கும் மைய அலுவலர்களிடம், குறைகள் தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். வணக்கம் நான் ஸ்டாலின் பேசுகிறேன் என ஏற்கனவே தொடர்புகொண்ட பிச்சை என்பவரை அழைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.
அதைத்தொடர்ந்து, வணக்கம் நான் ஸ்டாலின் பேசுகிறேன்…உங்கள் துறையில் மனுக்கள் அதிகமாக பெண்டிங் இருக்கிறது, மனு மேல் நடவடிக்கை எடுப்பதற்கு 155 நாட்கள் ஆகியுள்ளது என்கிறார்கள் என்று அதிகாரியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-ம.பவித்ரா