ஆங்கிலேயரை விரட்டியடித்த பூலித்தேவன் – முதல்வர் ஸ்டாலின்

விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்ட மாமன்னர் பூலித்தேவனின் 307ஆவது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர்…

விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்ட மாமன்னர் பூலித்தேவனின் 307ஆவது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பூலித்வேனின் பிறந்த நாளான இன்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “சல்லிக்காசு தரமுடியாது” என ஆங்கிலேயரை விரட்டியடித்து இந்திய விடுதலை வரலாற்றின் முதல் ஏட்டை எழுதிய மாவீரர் பூலித்தேவரின் பிறந்தநாளில் அவருக்கு என் வீரவணக்கம். நெற்கட்டும்செவலில் நினைவு மாளிகை அமைத்து அவர் தியாகத்தைப் போற்றியது கழக அரசு. இந்தியா முழுமையும் அவரைப் போற்றச் செய்வோம் என பதிவிட்டுள்ளார்.

அதேபோல, பூலித்தேவனின் பிறந்த நாளை முன்னிட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆங்கிலேயரை எதிர்த்து இந்தியாவிலேயே முதன் முதலில் வீர வாளை உயர்த்தி, மூன்று போர்க்களங்களில் வெள்ளையரை தோற்கடித்து வெற்றிக் கொடி ஏற்றியவர் நெற்கட்டும்செவல் மாமன்னர் மாவீரர் பூலித்தேவர் ஆவார். தமிழ்நாட்டிலேயே முதல் முலில் கழுகுமலைக்கு அருகில் அவருக்கு 1990 ஆம் ஆண்டு சிலையும், மண்டபமும் எழுப்பியது அடியேனும், என் தம்பி இரவிச்சந்திரனும் தான்.

மாவீரர் பூலித்தேவரின் வீரத்திற்கு நிகர் எவரும் இல்லை. சங்கரன்கோவில் ஆலயத்துக்குள் நுழைந்த பூலித்தேவர் அப்படியே மறைந்துவிட்டார். அவரது தியாகமும், வீரமும் வணக்கத்திற்கு உரியவை எனத் தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.