தஞ்சை ஆலக்குடி பகுதியில் வாய்க்கால் தூர் வாரும் பணியை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

தஞ்சை ஆலக்குடி பகுதியில் வாய்க்கால் தூர் வாரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணியை ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் 5.30 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியும், 8.90 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடியும் நடைபெற்று…

தஞ்சை ஆலக்குடி பகுதியில் வாய்க்கால் தூர் வாரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணியை ஆய்வு செய்தார்.

தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் 5.30 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியும், 8.90 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடியும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா பாசன பகுதி விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர்.

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணையில் ஜூன் 16-ம் தேதி தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மேட்டூர் அணை தண்ணீரை எதிர்நோக்கி கல்லணை மட்டுமின்றி அது அந்த தண்ணீர் செல்லும் வழித்தடங்கள் அனைத்தையும் சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதனையொட்டி காவிரி டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு சென்னையிலிருந்து திருச்சிக்கு சென்றடைந்தார். இதன் பின்னர் தஞ்சையில் அரசு விருந்தினர் மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் தஞ்சை ஆலக்குடி பகுதியில் முதலை முத்து வாரியில் நடைபெற்ற தூர்வாரும் பணியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். ஆய்வு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது  அப்பகுதியில் உள்ள பொது மக்களிடம் முதலமைச்சரிடம் மனுக்களை பெற்றார். இந்த ஆய்வின் போது நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்,  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் , ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு  மற்றும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் உடன் வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.