தமிழ்நாடு அளவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் நீளம் தாண்டுதலில் முதலிடம் பெற்ற தூத்துக்குடி மாணவி முத்துமீனாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழக அளவிலான பாரா ஒலிம்பிக் போட்டி சென்னையில் கடந்த 4 ஆம் தேதி முதல் 6 ஆம்
தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 500 க்கும் மேற்பட்ட
மாற்று திறன் கொண்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் தூத்துக்குடியை
சேர்ந்த மாணவி முத்துமீனா நீளம் தாண்டுதலில் முதலிடமும், குண்டு எறிதல்
போட்டியில் முதலிடமும் பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து தாயார் ஜெயலட்சுமியுடன் தூத்துக்குடி வந்த
முத்துமீனா வீட்டுக்கு செல்லும் வழியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு
இருந்ததால் என்ன காரணம் என விசாரித்து உள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவ்வழியே வருகிறார் என கேள்விப்பட்டதும்
வாய்ப்பிருந்தால் முதல்வரை சந்திக்கலாம் என அங்கு தனது மகளுடன் நின்று
உள்ளார். முதல்வரின் வாகன அணிவகுப்பு வந்ததும் இவர்கள் வணக்கம் தெரிவிக்க
சிறிது அடிகளை கடந்த முதல்வரின் வாகனம் நிறுத்தப்பட்டது. உடனடியாக
முத்துமீனாளை அழைத்து கொண்டு சென்ற அவரது தாயார் ஜெயலட்சுமியிடம் முதல்வர்
மு.க.ஸ்டாலின் விசாரித்து உள்ளார்.
தனது மகளின் விளையாட்டு திறமையையும் ஆட்டீச பாதிப்பு குறித்தும் முதல்வரிடம் தெரிவிக்க உடனடியாக முதல்வர் ஆவன செய்யப்படும் என தெரிவித்து உள்ளதோடு மட்டுமல்லாமல் மாணவி பெற்ற பதக்கத்தை முத்துமீனாக்கு அணிவித்து உள்ளார். முதல்வரிடம் தனது மகள் தேசிய போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளதையும் உதவிகளையும் கோரியுள்ளார். இதனை தொடர்ந்து
முதல்வர் அலுவலக அதிகாரிகள் முழு விபரத்தையும் பெற்று உள்ளனர். முதல்வர்
மு.க.ஸ்டாலின் முத்துமீனா விருதுகளை பெற வாழ்த்துகளை தெரிவித்ததோடு
மட்டுமல்லாமல் சர்வதேச பதக்கம் பெற்று தன்னை சந்திக்கவும் கேட்டு கொண்டார்