உலக சதுசங்கப் போட்டி நிறைவு விழாவையொட்டி நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் எங்கே என்பது தொடர்பாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
44வது உலகச் சதுரங்க போட்டியின் நிறைவு விழா சென்னை பெரியமேடு ராஜா முத்தைய்யா சாலையில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் நாளை (9-ம்தேதி) மாலை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் மாநில அமைச்சர்கள், பல்வேறு நாடுகளைச் சார்ந்த சதுரங்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துக் கொள்ள உள்ளார்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் சென்னைப் பெருநகர போக்குவரத்துக் காவல் துறையின் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரையில் இராஜா முத்தைய்யாச் சாலை, ஈ.வே.ரா பெரியார் சாலை, மத்தியச் சதுக்கம் மற்றும் சுற்றியுள்ளப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால் மாலை 3 மணி முதல் சூளை நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் ராஜா
முத்தையச் சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படமாட்டாது என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அத்தகைய வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை ஈ.வி.கே சம்பத் சாலை மற்றும் ஈ.வே.ரா சாலை வழியாக செல்லலாம். அதேபோன்றே ஈ.வி.கே சம்பத் சாலை ஜெர்மயா சாலைச் சந்திப்பிலிருந்து ராஜா முத்தையாச் சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிக நோக்கிலான வாகனங்கள் ஈ.வே.ரா சாலை கெங்குரெட்டிச் சாலைச் சந்திப்பு, நாயர் பாலச் சந்திப்பு, காந்தி இர்வின் சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கிச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது என்றும், அதுபோன்றே பிராட்வேயிலிருந்து வருகின்ற வணிக நோக்கிலான வாகனங்கள் குறளகம், தங்கச் சாலை, வால்டாக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் நோக்கித் திருப்பிவிடப்படும். இந்த வாகனங்கள் வியாசர்பாடி மேம்பாலம் வழியாகச் சென்றுத் தங்கள் வழித்தடங்களை அடையலாம் என்றும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
எனவே வாகன ஓட்டிகள் இந்த சாலை வழித்தடங்களைத் தவிர்த்து பிற வழித்தடங்களைப்
பயன்படுத்தி கொள்ளும்படியும், மத்திய ரயில் நிலையத்திற்கு வரவேண்டிய
பொதுமக்கள் அவர்களது பயணத்திட்டத்தினை முன்கூட்டியேத் திட்டமிட்டுக்கொள்ளவும்
சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.