தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் வெகுசிறப்பாக நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை விழா, கடந்த 17ஆம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கியது. இவ்விழாவினை முன்னிட்டு காலை மற்றும் மாலை இருவேளைகளிலும் சாமி புறப்பாடு நடைபெற்றது. மேலும், விழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிலையில், முன்னதாக தேரில் எழுந்தருளிய தியாகராஜர் மற்றும் கமலாம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாநகர மேயர் ராமநாதன் ஆகியோர் வடம் பிடித்து தேரினை இழுத்து தொடங்கி வைத்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த தேருக்கு முன்னதாக விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் சப்பரத்தில் எழுந்தருளினர். பாதுகாப்பு பணியில் 400க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, தஞ்சை மாநகர மேயர் சண்.இராமநாதன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
—-கு.பாலமுருகன்