நிலவின் தென் துருவ ரகசியங்களை தேடும் பிரக்யான் ரோவர் – சந்திரயான் 3 லேட்டஸ்ட் அப்டேட்!

சந்திரயான் – 3 திட்டத்தின் விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்த பிரக்யான் ரோவர் ஆய்வு செய்யும் காட்சியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவின் தென் துருவத்திற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அனுப்பிய சந்திராயன்…

சந்திரயான் – 3 திட்டத்தின் விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்த பிரக்யான் ரோவர் ஆய்வு செய்யும் காட்சியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

நிலவின் தென் துருவத்திற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 3 விண்கலமானது கடந்த 23-ந் தேதி மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. நிலவின் தென் துருவத்தில் உலகில் முதல் நாடாக இந்தியா கால்பதித்துள்ளது. இதற்கு உலக நாட்டு, தலைவர்கள் முதல் பலர் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்தனர்.

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து, ரோவர் பத்திரமாக தரையிறங்கியது. ரோவர் பிரிந்து நிலவை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு நிலவின் மேற்பரப்பில் லேண்டர் விக்ரம் மற்றும் பிரக்யான் ரோவர் தரையிறங்கிய வீடியோவை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஒவ்வொரு புதிய அப்டேட்களையும் இஸ்ரோ அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. லேண்டரில் இருந்து ரோவர் 8 மீட்டர் பயணித்ததாக இஸ்ரோ அண்மையில் அறிவித்தது.

அந்த வரிசையில் தற்போது நிலவில் நகர்ந்து சென்று ரோவர் ஆய்வு செய்யும் வீடியோவை இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில், “பிரக்யான் ரோவர் தென் துருவத்தில் நிலவின் ரகசியங்களைத் தேடுவதற்காக சிவசக்தி முனையைச் சுற்றித் திரிகிறது” என்ற அப்டேட்டுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.