18 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

18 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:  மத்திய மேற்கு வங்க கடலில் மையம் கொண்டு உள்ள ஆழ்ந்த…

18 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: 

மத்திய மேற்கு வங்க கடலில் மையம் கொண்டு உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசாவின் பரதீப்பில் இருந்து தெற்கில் சுமார் 430 கி.மீ. தொலைவிலும், (மேற்கு வங்கம்) திகாவில் இருந்து தெற்கு-தென்மேற்கில் 590 தொலைவிலும் மற்றும் (வங்காளதேசம்) கேபுபாராவில் இருந்து தென்-தென்மேற்கில் 740 கிமீ தொலைவிலும் மையம் கொண்டு உள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 18 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. பின்பு சற்று வலு குறைந்து அக்டோபர் 25 ஆம் தேதி மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கதேசத்தின் கேபுபாரா மற்றும் சிட்டகாங் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது. புயலாக உருவாக்கும் பட்சத்தில் வட இந்திய பெருங்கடலில் புயலுக்கு பெயரிடும் முறைப்படி ஈரான் நாடு பரிந்துரைத்த Hamoon என பெயர் வைக்கப்பட உள்ளது.

வங்கதேசத்தின் கேபுபாரா, சிட்டகாங் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.