ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை 2 மடங்காக உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி!

ஆயுத பூஜையை முன்னிட்டு, பூக்கள், கரும்பு ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது. ஆயுத பூஜையை முன்னிட்டு, நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சி மார்க்கெட்டில் கரும்பு மற்றும் மலர்கள் விற்பனை களைகட்டியுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது…

ஆயுத பூஜையை முன்னிட்டு, பூக்கள், கரும்பு ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது.

ஆயுத பூஜையை முன்னிட்டு, நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சி மார்க்கெட்டில் கரும்பு மற்றும் மலர்கள் விற்பனை களைகட்டியுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது கரும்பு விலை அதிகரித்துள்ளது. ஒரு கட்டு கரும்பு 800 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல், மல்லிகை, செவ்வந்தி உள்ளிட்ட பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.

மேலும்,  மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் பூக்களின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது. குறிப்பாக, மல்லிகை பூ கிலோ 1,300 ரூபாய்க்கு விற்பனையானது. பிச்சிப் பூ 700 ரூபாய்க்கும், முல்லைப் பூ 700 ரூபாய்க்கும் விற்பனையானது. செவ்வந்தி, துளசி ஆகியவைகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. பண்டிகை காலம் என்பதாலும், வரத்து குறைந்ததாலும் விலை மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் மலர் சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.