மகாராஷ்ட்ராவின் சிவ சேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேருக்கு மத்திய அரசு ஓய் பிளஸ் பாதுகாப்பை வழங்கியுள்ளது.
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான குழுவில் சிவ சேனாவைச் சேர்ந்த 38 எம்எல்ஏக்கள், 9 சுயேட்சை எம்எல்ஏக்கள் என மொத்தம் 47 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் உள்ள ப்ளூ ரேடிசன் நட்சத்திர விடுதியில் தங்கி இருக்கின்றனர்.
இதனிடையே, புனேவில் உள்ள ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ தானாஜி சாவந்த்தின் அலுவலகம், சிவ சேனா தொண்டர்களால் சூறையாடப்பட்டது.










