இயக்குனர் மாரி செல்வராஜ், சென்னையில் கட்டியிருக்கும் புதிய இல்லத்திற்கு நேரில் சென்று முக்கிய பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ் சமீபத்தில் தனது கனவு இல்லத்தை, சென்னையில் கட்டிமுடித்திருந்தார். அந்த புதிய இல்லத்திற்கு அண்னையில் அவர் குடும்பத்தோடு குடியேறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மாரிசெல்வராஜின் குருநாதர், இயக்குனர் ராம் ஆசிர்வாதத்தோடு நடந்த இந்த புது இல்ல அறிமுக விழா நிகழ்வில், இயக்குனர் பா.இரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் தானு மற்றும் திரையுலத்தை சார்ந்த நெருக்கமான சில நண்பர்கள் கலந்துகொண்டனர்.
அண்மைச் செய்தி: காலப்போக்கில் அதிமுக, திமுகவில் சங்கமம் ஆகிவிடும் – அமைச்சர் ஐ.பெரியசாமி
இந்த நிகழ்வில், இயக்குனர் மாரி செல்வராஜின் மூன்றாவது பட நாயகனும் தயாரிப்பாளருமான, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று, அவரின் இல்லதிற்கு நேரில் சென்று தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி C.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக, இயக்குனர் மாரி செல்வராஜின் மகள், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற அந்த புகைப்படம் இணையத்தில், பலராலும் ரசிக்கப்படுகிறது. மேலும், அந்த நிகழ்வில் அவர் மாரி செல்வராஜின் குடும்பத்தோடு இணைந்து எடுத்துகொண்ட புகைப்படங்களும் தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.