நாளை மறுநாள் முதல் PK ரோசி திரைப்பட விழா – இயக்குநர் பா.ரஞ்சித் அறிவிப்பு!

அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக கொண்டாட திட்டமிட்டுள்ள இயக்குநர் பா.ரஞ்சித்,  PK ரோசி திரைப்பட விழாவை நடத்தவுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தங்கலான் திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்…

அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக கொண்டாட திட்டமிட்டுள்ள இயக்குநர் பா.ரஞ்சித்,  PK ரோசி திரைப்பட விழாவை நடத்தவுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தங்கலான் திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ.ஞானவேல்ராஜா நீலம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார். இது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 22 ஆவது தயாரிப்பாகும்.
விக்ரமின் கோப்ரா மற்றும் ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது இந்த இந்த இரு படங்களும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.  பொன்னியின் செல்வன் படத்தைத் தொடர்ந்து, விக்ரம் நடிப்பில் தயாராகும் தங்கலான் படத்தினை பா.ரஞ்சித் இயக்குகிறார். 90 கால கட்டத்தில் கேஜிஎஃப் இல் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சர்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்கு பின் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில், முதல்  முறையாகச் விக்ரம் கதையின் நாயகனாக நடிப்பதால், இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் தொடங்கியது. பா.ரஞ்சித் தனது
வழக்கமான கதைக்களத்தில் இப்படத்தை இயக்கி வருகிறார். தங்கலான் என்றால் ஊர்க்காவல் என்று அர்த்தம். ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை பற்றிதான் இதிலும் சொல்லப்படுகிறது என்று இதன் டீசர் வீடியோவிலேயே தெரிந்தது.

இந்நிலையில், அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் மாதத்தைத் தலித் வரலாற்று மாதம் ஆகத் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் கொண்டாட உள்ளதாக இயக்குநர் ரஞ்சித் தெரிவித்துள்ளார். இந்த ஏப்ரல் மாதம் முழுவதும் தலித் வரலாற்றுக் கண்காட்சி, திரைப்பட விழா, புகைப்படக் கண்காட்சி, இசை நிகழ்ச்சி, அரசியல் நிகழ்வு, ஓவியக் கண்காட்சி
இலக்கியக் கூடுகை என பல்வேறு நிகழ்வுகளை வானம் -கலைத் திருவிழா- 2023 என்ற பெயரில் அவர் நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த அனைத்து நிகழ்ச்சிகளும் இன்று (ஏப்ரல் 5) முதல் 30 வரை நடைபெற உள்ளது.

https://twitter.com/Vaanam_Art/status/1643524034364153857?s=20

அந்த வகையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் பிரிவ்யூ  திரையரங்கத்தில் PK ரோசி திரைப்பட விழா 2023 என்ற பெயரில் ஏப்ரல் 7 முதல் 9 வரை திரைப்பட விழா நடத்தவுள்ளதாக பா. ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.