மேலிட பார்வையாளர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் நடைபெற்ற பாஜக எம்மணிப்பூர் முதலமைச்சராக பைரன் சிங் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பாஜக உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் வெற்றிபெற்றது. தீவிரமாக எதிர்த்து பரப்புரை செய்த காங்கிரஸ் கட்சி அனைத்து மாநிலங்களிலுமே தோல்வியை தழுவியது. இந்த நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் 20 க்கும் மெற்பட்ட எம்எல்ஏக்களை கொண்டிருந்த ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் மாநிலத்தை கைப்பற்றியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
4 மாநில தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவினர் அந்ததந்த மாநிலங்களில் ஆட்சியமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மணிப்பூர் மாநில தேர்தலில் 60 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக அதில் 32 தொகுதிகளை கைப்பற்றியது.
இதனை தொடர்ந்து மணிப்பூரில் மேலிட பார்வையாளர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பைரன் சிங் மணிப்பூர் சட்டமன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
ஏற்கனவே முதலமைச்சராக இருந்த பைரன் சிங், தற்போது இரண்டாவது முறையாக முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் இவர், ஆளுநர் இல. கணேசனிடம் பதவியேற்க உரிமை கோர உள்ளார்.