ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு விளாத்திகுளம் அருகே நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேலாயுதபுரம் கிராமத்தில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் விருதுநகர், தேனி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 50க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் இப்போட்டியில் கலந்து கொண்டன.
இப்போட்டி சூரங்குடி-தூத்துக்குடி சாலையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இப்போட்டிகள் பூஞ்சிடு மாட்டு வண்டி மற்றும் சிறிய மாட்டு வண்டி என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியை முன்னாள் ராணுவ வீரர் மாரிமுத்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இப்போட்டியில் சிறிய மாட்டு வண்டியில் 17 ஜோடி மாட்டுகள் கலந்து கொண்ட இப்போட்டியில் 6 கிலோமீட்டர் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியாக பெரிய மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியில் 16 ஜோடி மாட்டுகள் கலந்து கொண்டன. இவைகளுக்கு 8 கிலோமீட்டர் தூரம் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த மெடிக்கல் விஜயகுமார் என்பவரது மாடு முதல் பரிசையும் இரண்டாவது பரிசாக கடம்பூர் பகுதியைச் சேர்ந்த கருணாகரராஜா என்பவரது மாட்டுவண்டி பரிசை தட்டி சென்றன.
சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் முத்தையா என்பவரது மாடும் இரண்டாவது பரிசாக சுமையான புறத்தை சேர்ந்த தண்டபாணி என்பவர் மாட்டு வண்டியும் பரிசை தட்டி சென்றன. இதில் வெற்றி பெற்ற மாடுகளுக்கும் மாட்டின் உரிமையாளருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
இப்போட்டியை காண விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழி நெடுகிலும் கைதட்டி மாட்டு வண்டி வீரர்களை உற்சாகப்படுத்தினர்.







