ஹிமாசல பிரதேச மழைக்கு பல கட்டடங்கள் தரைமட்டமான நிலையில், பீகார் தொழிலாளர்களை கொண்டு எந்த விதிமுறையையும் பின்பற்றாமல் கட்டடங்கள் கட்டப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
ஹிமாசல பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சிம்லாவின் சம்மா் ஹில், கிருஷ்ணா நகா், ஃபாக்லி உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் பல கட்டடங்கள் மண்ணில் புதைந்தன. சம்மர் ஹில் பகுதியில் சிவன் கோயில் பகுதியில் சிவன் கோயில் ஒன்று தரைமட்டமானது. இதில் இடிபாடுகளில் சிக்கிய 13 பேர் மீட்கப்பட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுதொடர்பாக ஹிமாசல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:
“சிம்லா ஒரு நூற்றாண்டு பழமையான நகரம். இங்கு சிறந்த வடிகால் அமைப்பு உள்ளது. மலைகளின் கட்டடக்கலை கொள்கைகளை கடைபிடித்து கட்டப்பட்ட அனைத்து பழைய கட்டடங்களும் நிமிர்ந்து நிற்கின்றன ஆனால் நகரில் சில கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. அந்த கட்டடங்கள் உரிய கட்டமைப்பு மற்றும் தரத்துடன் கட்டப்படவில்லை. வெளி மாநிலங்களில் இருந்து (பீகார்) வந்த கட்டட தொழிலாளர்களை வைத்து எந்த விதிமுறை மற்றும் திட்டமிடல் இல்லாமல் மாடி மாடியாக கட்டடங்கள் கட்டப்படுகின்றன. இநத விபத்துகளுக்கு அதுவே முக்கிய காரணம். எங்கள் மாநிலத்தில் போதுமான கட்டுமான தொழிலாளர்கள் இல்லை” என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.