முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம்

வாக்கு எண்ணிக்கை: முகவர் என்பவர் யார்? அவரின் பணிகள் என்ன?


விக்னேஷ்


வாக்குப் பதிவு மட்டுமல்ல வாக்கு எண்ணிக்கையின் போதும் ஏஜெண்டுகள் என்று அழைக்கப்படும் முகவர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அப்படியிருக்கும் சூழலில் முகவர் என்பவர் யார் ? அவரின் பணிகள் என்ன ? வாக்கு எண்ணிக்கையின் போது அவரின் பங்கு எத்தகையை முக்கியவத்துவம் வாய்ந்தது ? என்பதை சற்று விரிவாக பார்க்கலாம்

  • அரசியல் கட்சி மற்றும் வேட்பாளர்களின் நம்பிக்கைக்குரியவர்களே முகவர்களாக நியமிக்கப்படுவார்கள்.
  • 18 வயது நிரம்பியவர்கள் முகவர்களாக நியமிக்கப்படுவதற்காக அடிப்படை தகுதியாகும்.
  • வாக்கு எண்ணிக்கை மையங்களில் வேட்பாளர்களின் பிரதிநிதிகளாக முகவர்கள் செயல்படுவர்.
  • வாக்கு எண்ணிக்கையை கண்காணிப்பது முகவர்களின் பிரதான பணியாக இருக்கும்.
  • வாக்கு எண்ணிக்கைக்கு மூன்று தினங்களுக்கு முன்பாக முகவர்கள் யார் என்பவர்கள் உறுதி செய்யப்படும்.
  • ஒரு வாக்கு எண்ணிக்கை மையத்தில் தலைமை முகவர் உட்பட 15 முகவர்கள் இருப்பார்கள்.
  • முகவர்களின் பணி தேர்தல் அதிகாரிகளின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் இருக்கும்.
  • தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடிதமே முகவர்களின் அடையாள அட்டையாக பயன்படும்.
  • தபால் வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
  • வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் VVPAT இயந்திரங்களின் செயல்பாடுகளை முகவர்கள் முழுமையாக அறிந்திருக்க வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சி, பதிவு செயப்பட்ட கட்சி, சுயேட்சை அடிப்படையில் முகவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருக்கும்.
  • அமைச்சர்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பதவி வகிப்போர் முகவராக செயல்பட முடியாது.
  • தமிழக அரசுப் பணிகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் முகவர்களாக செயல்பட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
  • அரசுப் பணியில் இருப்போர் முகவராக செயல்பட்டது தெரியவந்தால் அவர்களுக்கு மூன்று மாதம் சிறை அல்லது அபராதம் விதிக்கப்படும்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தேர்தல் பரப்புரையில் திமுகவை கடுமையாக விமர்சித்த தினகரன்

Niruban Chakkaaravarthi

‘ஆசிஸ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து’ – உச்சநீதிமன்றம்

Arivazhagan Chinnasamy

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பிரதமர் பாராட்டு

Halley Karthik