தமிழ்நாட்டில் தலைவிரித்தாடும் லஞ்சம் மற்றும் குடும்ப அரசியலை ஒழிக்க பாஜக கடுமையாக உழைக்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
75வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில், கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தேசியக்கொடி ஏற்றினார். இந்நிகழ்வில் கேசவ விநாயகம், ஹெச்.வி.ஹண்டே, ஹெச்.ராஜா, வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், குஷ்பு, திருப்பதி நாராயணன், வினோஜ் பி.செல்வம், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தேசியக்கொடியை ஏற்றிய பின் கட்சியினர் மத்தியில் அண்ணாமலை சுதந்திர தின உரையாற்றினார். அதில், 75-வது சுதந்திர தினம் முடிந்து, 76-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் தருணமிது. காஷ்மீரில் இருந்து கொண்டு வரப்பட்ட தேசியக்கொடியை இங்கு ஏற்றியுள்ளோம்.
சுதந்திரத்துக்கு பாடுபட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு மிக அதிகம். தமிழ்நாட்டில் மருது சகோதரர்கள் முதல் பலர் சுதந்திரத்துக்காக போராடியுள்ளனர். கடந்த ஓராண்டாகவே சுதந்திரத்துக்காக பாடுபட்டவர்களை பாஜக கொண்டாடி வருகிறது. இன்று தமிழ்நாட்டில் தேசியக்கொடி இல்லாத வீடுகளே இல்லை.
இந்தியா ஒற்றுமையின் வடிவம் என்பதை தமிழ்நாட்டு மக்கள் காட்டியுள்ளனர். பலர் பாஜக அலுவலகங்களில் தேசியக்கொடியை பெற்று, தங்கள் இல்லங்களில் ஏற்றியுள்ளனர். இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்றியமைக்காக அனைத்து தமிழ் மக்களுக்கும் பாஜகவின் நன்றிகள்.
அனைத்து துறைகளிலும் பெண்கள் வலிமையான இடத்தை பிடித்துள்ளனர் என்று பிரதமர் பேசியுள்ளார். இந்தியாவின் கண்முன் இருப்பது லஞ்சம், குடும்ப அரசியல் என்ற இரு பிரச்சனைகள் தான் என்று பிரதமர் பேசியுள்ளார். ஏழை மக்கள், திறமையுள்ளவர்கள் முன்னேறிச் செல்ல லஞ்சம் தடையாக உள்ளது. லஞ்சம் வாங்குவோர், குடும்ப அரசியல் செய்வோரை ஒழித்துக்கட்ட வேண்டும்.
தமிழ்நாட்டில் லஞ்ச லாவண்யம், குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது. இதை ஒழிக்க பாஜக கடுமையாக உழைக்கும். அடுத்த 25 ஆண்டுகள் முடிந்த உடன், தமிழ்நாடு இந்தியாவின் விஷ்வகுருவாக வர வேண்டும். அனைவரும் அதற்காக உழைத்திட வேண்டும்.