திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும்- முதலமைச்சர் மாணிக் ஷாகா

திரிபுராவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என அந்த மாநில முதலமைச்சர் மாணிக் ஷாகா நம்பிக்கை தெரிவித்துள்ளார். திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. 60 தொகுதிகளை…

திரிபுராவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என அந்த மாநில முதலமைச்சர் மாணிக் ஷாகா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. 60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டப் பேரவைக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்த தேர்தலில் அங்கு ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கவும், இழந்த ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் மார்க்சிஸ்ட் கட்சியும் உள்ளது. இந்த இருகட்சிகளுக்கும் இடையே அங்கு கடும் போட்டி நிலவுகிறது.
காலை முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்கள் காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி 13.23 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மாநில முதலமைச்சர் மாணிக் ஷாகா போரோடோவாலி தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மாணிக்ஷா, காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இதை பார்க்கும் போது பாஜக மீண்டும்  ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.