முக்கியச் செய்திகள்இந்தியா

“இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பாஜக செயல்படுகிறது” – அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

இட ஒதுக்கீட்டின் அடிப்படை கருத்தியலுக்கு எதிராக பாஜக செயல்படுவதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மை மக்களின் கல்வி நிலையை சுட்டிக்காட்டி, விளிம்புநிலை மக்களுக்கு எதிராக பாஜக செயல்படுவதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்  விமர்சித்துள்ளார்.  இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்ததாவது…

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

”பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தோர், பழங்குடியினத்தோர், முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டில் பாசாங்கு வேலையைச் செய்கிறது. கல்வி நிலையங்களில் உள்ள பணியிடங்களை பிரதிநிதித்துவப்படுத்து நபர்களின்  எண்ணிக்கையில் மேற்சொன்ன சமூகத்தினர் குறைவாகவே உள்ளனர்.

இதையும் படியுங்கள் : “அடுத்த வாரத்திலிருந்து நான் வேலையில்லாத நபர்.. ஏதாவது வேலை கிடைக்குமா?” – ராகுல் டிராவிட் பேச்சால் சிரிப்பலை!

இந்த சமூகத்தை சார்ந்த யாரேனும் ஒருவர் கூட துணை வேந்தர்களாக இல்லை. ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் 15 சதவீதத்துக்கும் குறைவான பணியாளர்களே இச்சமூகத்தைச்  சேர்ந்தவர்கள் உள்ளனர். அவர்களுக்கு சாதகமாக எதையும் பாஜக செய்யவில்லை. இடஒதுக்கீட்டின் அடிப்படைகளுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது”

இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

திருச்சி – தாம்பரம் இடையே இன்றிரவு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்!

Web Editor

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை – ஒரே நாளில் சவரனுக்கு ரூ.296 உயர்வு..!

Web Editor

இசை உலகின் பேரரசி ஸ்ரேயா கோஷலின் கதை.

G SaravanaKumar

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading