தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் இரு மொழிக் கொள்கையே அமல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை ஆணையர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை அமல்பத்தப்பட்டிருப்பதாக செய்தித்தாளில் வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், மொழிக் கொள்கை குறித்து உண்மைக்குப் புறம்பாக மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் வெளியிடப்படும் செய்திகளை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தியுள்ள அவர்,
2016-ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டத்தின்படி ஒவ்வொரு மாணவரும் பத்தாம் வகுப்பு வரை தமிழ்மொழியை கட்டாயப் பாடமாக கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழை தாய்மொழியாக கொள்ளாத மாணவர்கள், தமிழுடன் அவர்களது தாய்மொழியை விருப்பப்பாடமாக படித்து தேர்வு எழுதும் நடைமுறை பல ஆண்டாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அண்மைச் செய்தி: “மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்டுள்ளோம்” – புதுச்சேரி முதலமைச்சர்
மேலும், தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் இரு மொழிக் கொள்கையே தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.