மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதி உட்பட 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் வாக்குப் பதிவு தொடங்கி இருக்கிறது.
எம்.எல்.ஏ.,வாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடும், பவானிபூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடக்கிறது. வன்முறை ஏற்படாமல் தடுக்க, தொகுதி முழுதும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. அக்., 3ல் வெளியாகும் தேர்தல் முடிவு, மம்தாவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில், மொத்தமுள்ள 294 தொகுதிகளில், 213 இடங்களில், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அபாரமாக வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. ஆனால், அந்தக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளரான மம்தா பானர்ஜிம, நந்திகிராம் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார்.
இருந்தாலும் மூன்றாவது முறையாக முதலமைச்சராக அவர் பதவியேற்றார். இதனால், அவர் ஆறு மாதங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.,வாக வேண் டிய கட்டாயம் ஏற்பட்டதை அடுத்து, பவானிபூர் தொகுதி திரிணமுல் எம்.எல்.ஏ., சோபன்தே, பதவியை ராஜினாமா செய்தார். அந்த தொகுதிக்கு இன்று (செப்.30) இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி இன்று வாக்குப் பதிவு நடக்கிறது. இதில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜ சார்பில், பிரியங்கா திப்ரேவால் போட்டியிடு கிறார். இந்த தேர்தலில், வேட்பாளரை நிறுத்தவில்லை. இன்று காலை 7:00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பதற்றத்தை தவிர்க்க, பவானிபூர் தொகுதி முழுவதும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
பவானிபூர் தவிர ஷாம்ஷெர்கஞ்ச், ஜாங்கிபூர் ஆகிய தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 3ம் தேதி நடக்கிறது.