34.4 C
Chennai
September 28, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ…

ஆசியக் கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியின் பட்டியலை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்க உள்ளது. உலக கோப்பைக்கு தேவையான இறுதிக்கட்ட அணியை தேர்வு செய்வதற்கு உதவும் இந்த தொடரில் பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகள் ஏற்கனவே தங்களுடைய அணிகளை அறிவித்துவிட்டன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த ஆசிய கோப்பை தொடரானது பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாட்டில் நடைபெற உள்ளது. மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் செப்டம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கு கலந்து கொள்ளும் இந்திய அணியின் விளையாட்டு வீரர்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த ஆசிய கோப்பை தொடருக்கான அணித்தேர்வு கூட்டத்தில் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர், அவரது குழு நிர்வாகிகள், பயிற்சியாளர் டிராவிட், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் என பலரும் கலந்து கொண்டனர். அதன்படி சில மணி நேரங்கள் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பிறகு தற்போது ஆசியக் கோப்பை தொடருக்கான 17 பேர் கொண்ட முழு இந்திய அணியையும் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரோகித் சர்மா கேப்டன் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்திய அணியில் விராட் கோலி, சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், சூரியகுமார் யாதவ் , திலக் வர்மா, இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், ஷர்துல் தாக்கூர்,  பும்ரா, முகமது ஷமி, சிராஜ், குல்தீப் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் உள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram