32.9 C
Chennai
June 26, 2024
முக்கியச் செய்திகள் உலகம்

வங்கதேசம் ஷாப்பிங் மாலில் திடீர் தீ விபத்து – 44 பேர் உயிரிழப்பு… பலர் படுகாயம்!

வங்கதேச தலைநகர் டாக்காவில் 6 தளங்கள் கொண்ட வணிக வளாகத்தில் (Shopping Mall) ஏற்பட்ட தீ விபத்தில் 44 பேர் பலியாகினர்.  பலர் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

வங்கதேச தலைநகர் டாக்காவில் 6 தளங்கள் கொண்ட வணிக வளாகம் (Shopping Mall) ஒன்று செயல்பட்டு வருகிறது.  அந்த வணிக வளாகத்தில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று இரவு சுமார் 9.50 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.   இந்த தீ மளமளவென கட்டிடம் முழுவதும் வேகமாக பரவியது.  மேல் தளங்களிலும் உணவகங்கள், துணிக் கடைகள் இருந்தன. இதனால் தீ இன்னும் எளிதாகப் பரவியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் கடுமையான போராடி தீயை அணைத்தனர்.  தீயணைப்பு வீரர்கள் வணிக வளாகத்தில் இருந்து 75 பேரை உயிருடன் மீட்டனர்.  இந்த தீ விபத்தில் 44 பேர் உயிரிழந்தனர்.  22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  இந்த தீ விபத்து டாக்கா மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading