தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் பிரிவினை ஏற்பட்டுள்ள நிலையில், கட்சி அலுவலகத்தில் பாகுபலியாக சரத் பவாரும், கட்டப்பாவாக அஜீத் பவாரும் சித்தரிக்கப்பட்டு போஸ்டர் வைக்கப்பட்டுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியானது இருபிரிவாகச் செயல்பட்டு வரும் நிலையில், இரு தரப்பும் பரஸ்பரம் நிா்வாகிகளை நியமித்தும் நீக்கியும் வருவதால் அக்கட்சியில் தொடா்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. சரத் பவாா் தலைமையில் இயங்கி வந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியானது, அக்கட்சியின் மூத்த தலைவா் அஜீத் பவாா் தலைமையில் பிளவுபட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அஜீத் பவாா் பாஜக-சிவசேனை அணிக்கு மாறி மகாராஷ்டிர துணை முதல்வராக கடந்த ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அந்தக் கட்சியின் 8 எம்எல்ஏ-க்களும் மாநில அமைச்சா்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனா். தேசிய அளவில் இந்த அரசியல் நகா்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜீத் பவாா் தலைமையிலான எம்எல்ஏ-க்கள் பாஜக-சிவசேனை கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா்.
இதனால், கட்சியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சரத் பவாா் முன்னெடுத்துள்ளாா். அதன் ஒரு பகுதியாக, கட்சியின் மூத்த தலைவா்களான பிரஃபுல் படேல், சுனில் தத்காரே ஆகியோரைக் கட்சியில் இருந்து நீக்குவதாக சரத் பவாா் கடந்த திங்கள்கிழமை அறிவித்தாா். அதே சமயத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கான புதிய நிா்வாகிகளை பிரஃபுல் படேல் அறிவித்துள்ளாா். அதன்படி, சுனில் தத்காரே கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
கட்சியின் மாநிலத் தலைவராக ஏற்கெனவே செயல்பட்டு வரும் ஜெயந்த் பாட்டீலிடம் இது தொடா்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பொறுப்பை தத்காரேவிடம் ஒப்படைக்கும்படி வலியுறுத்தியுள்ளதாகவும் பிரஃபுல் படேல் தெரிவித்தாா். கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக அஜீத் பவாா் செயல்படுவாா் என்றும் பிரஃபுல் படேல் தெரிவித்துள்ளாா்.
மாநில சட்டப்பேரவையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கொறடாவாக அனில் பாட்டீல் நீடிப்பாா் என்றும் அவா் தெரிவித்துள்ளாா். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில மகளிரணித் தலைவராக ரூபாலி சகான்கரும், செய்தித் தொடா்பாளா்களாக அமோல் மித்காரி, ஆனந்த் பரான்பே ஆகியோரும், மாநில இளைஞரணித் தலைவராக சூரஜ் சவாணும் செயல்படுவாா்கள் என பிரஃபுல் படேல் தெரிவித்துள்ளாா்.
இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர், கட்சிக்கு உரிமை கொண்டாடி, தேர்தல் ஆணையத்தை அணுகியிருக்கும் நிலையில், கட்சியின் மாணவர் அணியினர், டெல்லியில் உள்ள கட்சி அலுவலக வளாகத்தில், கட்சியின் நிர்வாகி, சரத் பவாருக்கு எதிராக துரோகச் செயலில் ஈடுபட்டதாக, அஜீத் பவாரை கட்டப்பா என்று சித்தரிப்பது போல பாகுபலி போஸ்டரை வைத்துள்ளனர்.
அமரேந்திர பாகுபலியாக சித்தரிக்கப்பட்டிருக்கும் சரத் பவாரின் முதுகில் அஜீத் பவார் குத்திவிட்டதாகவும், துரோகி என்று ஹேஷ்டேக்குடன் இணைத்தும் அந்த போஸ்டர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.