பானிபூரியில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் உள்ளதாக கர்நாடகாவில் மாதிரிகளை சோதனை செய்ததில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அண்மை காலமாக மக்கள் அன்றாடம் உண்ணும் உணவு வகைகள் பலவற்றில் தீங்கு விளைவிக்கும் செயற்கை ரசாயனங்கள் இருப்பது தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் பஞ்சு மிட்டாயில் சேர்க்கப்படும் நிறமிகளில் உள்ள ரசாயனம் உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக கண்டறியப்பட்ட நிலையில் அது தடை செய்யப்பட்டது.







