வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்றும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனையடுத்து நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் கன மழை பெய்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில், அதிகபட்சமாக நாகை மாவட்டத்தில் 9 சென்டி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் பிப்ரவரி மாதத்தில் 9 சென்டி மீட்டர் அளவு மழை பதிவானது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தஞ்சை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்றும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மயிலாடுதுறையில் கனமழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராமனாதபுரத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.