அடேங்கப்பா…! சண்டைக்காட்சிக்கு இவ்வளவு செலவா? -ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச்செய்த புஷ்பா படக்குழு!!!

புஷ்பா 2 படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அல்லு அர்ஜீன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்த…

புஷ்பா 2 படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

அல்லு அர்ஜீன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்த இப்படத்தில் ஃபகத் பாசில், சுனில், அஜய் கோஷ், மைம் கோபி உட்பட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். சுகுமார் இயக்கிய இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார்.

தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னட உள்ளிட்ட மொழிகளில் வெளியான இப்படம் இந்தியில் அதிக வசூலை ஈட்டியது. இந்தியில் மட்டும் ரூ,100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தினர்.

அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘புஷ்பா 2’ திரைப்படம், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் புஷ்பா 2 படப்பிடிப்பில் ராஷ்மிகா கலந்துகொண்டுள்ளார். மேலும், அண்மையில் சண்டைக் காட்சிகளுக்காக ஒரு நாளுக்கு 80 லட்சம் ரூபாய் செலவிடப்படுவதாகக் கூறப்படுகிறது. மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.