பேரியம் மற்றும் சரவெடிகளுக்கு அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது!
பேரியம் நைட்ரேட் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்துவதால் உடலுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்படுவதாக தெரிவித்து அவற்றுக்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதேபோல் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள நேர கட்டுப்பாட்டை தளர்த்தவும், பசுமைப் பட்டாசு உற்பத்தி செய்ய விரைந்து ஒப்புதல் வழங்கக் கோரியும் தொடர்பாக தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
அப்போது நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கும் நேரத்தில் எந்த மாற்றம் இல்லை. ஏற்கனவே உள்ள காலை 6 முதல் 7 மணி வரையும் மாலை 7 மணி முதல் 8 வரையும் பட்டாசு வெடிக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க, விற்பனை செய்ய, வெடிக்க நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
பேரியம் மற்றும் சரவெடி தொடர்பான அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், அதன் மீதான தடை தொடரும் என தெரிவித்தனர்.