அமெரிக்காவிலுள்ள அரிசோனா பாலைவனத்தில் உலகத்திலேயே அதிகமான பழுதடைந்த விமானங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் அமைந்துள்ள அரிசோனா பாலைவனத்தில் விண்வெளி பராமரிப்பு மற்றும் மீளுருவாக்கக் குழு இயங்கி வருகிறது. இங்கு உலகத்திலேயே அதிகமான ராணுவ விமான வகைகள் உள்ளன. அதாவது, ராணுவப் பணிகளில் இருந்து விடைபெற்ற, வனப் பணிகளில் ஈடுபடுத்த பழைய விமானங்களும் நாசாவின் விமானங்களும் வைக்கப்பட்டுள்ளன. F-16, C-5s, B-52s, A-4 ஸ்கைகவாஸ் உள்ளிட்ட விமான வகைகள் இங்கு அதிகளவில் உள்ளன.
உதிரி பாகங்களை சரிசெய்து, விமானங்களை மீண்டும் உருவாக்கும் பணிகள் இங்கு நடைபெற்று வருகின்றன. விமானங்களை மீளுருவாக்கும் செய்யும் பணிகளில் 800 மெக்கானிக் இடைவிடாமல் பணியாற்றி வருகிறார்கள்.
இதுதொடர்பாக குழுவின் கமாண்டர் ஜெனிபர் பர்னாட் கூறுகையில், எங்களுடைய நோக்கம் பழுதான விமானங்களுக்கு சமாதி கட்டுவதல்ல. ஒரு காரை மறு உருவாக்கும் செய்வது போலதான் விமானத்தையும் செய்கிறோம், அதில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளலாம் என்று கூறினார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 1946ஆம் ஆண்டு விமானப் பராமரிப்பு மற்றும் மீளுருவாக்கக் குழு தொடங்கப்பட்டது. உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட பழைய விமானங்களை நிறுத்திவைக்க ஒரு இடம் தேவைப்பட்ட நிலையில்தான் அரிசோனா பாலைவனத்தில் டக்சோன் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு விமானங்கள் நிறுத்திவைக்கப்பட்டன. தற்போது 80 வெவ்வேறு வகைகளைச் சேர்ந்த 3,100 விமானங்கள் அங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 2,600 ஏக்கர் பரப்பளவில் இந்த விமானங்கள் நிறுத்துமிடம் அமைந்துள்ளது.







