பிற மதங்களை மதிக்காதவர்கள் யாராக இருந்தாலும் கோயிலுக்கு செல்ல தகுதியில்லாதவர்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியில் ஆதிகேசவ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இது 108 வைணவ தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. பல புராண வரலாறுகளை கொண்ட இந்த கோயிலில் 418 ஆண்டுகளுக்கு இன்று கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடந்தது.
கும்பாபிஷேக விழாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் குமார், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேகம் விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் குறிப்பிட்ட மதத்தில் இருக்கிறேன். அதனால் பிற மதத்தை மதிக்க மாட்டேன் என்று சொல்ல கூடிய மன நிலை படைத்த யாராக இருந்தாலும் மற்றொரு வழிபாட்டு தலத்திற்கு செல்ல அருகதை இல்லாதவர்கள் என்றார்.
418 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோயில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. நமது மூதாதையர்களுக்கு கிடைக்காத பாக்கியம் நமக்கு கிடைத்துள்ளது. இன்று எனக்கு கிடைத்த பாக்கியம் எல்லாருக்கும் கிடைத்திருக்கும் என்று நான் சொல்ல மாட்டேன். இனி வரும் காலங்களில் திருவனந்தபுரம் ஆனந்த பத்மநாப சுவாமி கோவில், ஸ்ரீ ரங்கத்தில் உள்ள ரங்கநாத சுவாமி கோவிலை விட சிறப்பான பூஜைகள் அதிகேசவருக்கும் நடைபெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இது மத நம்பிக்கையை பொறுத்தவரை யாரும் எந்த ஆலயத்திற்கும் வர கூடாது என்று
கிடையாது. தஞ்சை முத்து மாரி அம்மன் கோவிலில் இஸ்லாமிய பெண்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இது நம்பிக்கையை மதிக்கும் தன்மையை பொறுத்தது என்று கூறினார்.








