12 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடந்த 30-ம் தேதி அமெரிக்கா புறப்பட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 12 நாட்களாக லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, சியாட் போன்ற இடங்களில் உள்ள இந்தியர்கள், இந்திய வம்சாவளி தொழில்முனைவோர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். ஆஸ்பென் இன்ஸ்ட்டியூட்டில் சர்வதேச தலைவர் பெல்லோஷிப் பயிற்சியில் நேரடியாக பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்ற அண்ணாமலை, பாஜக மற்றும் தமிழ் மக்களையும் சந்தித்து உரையாடினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அமெரிக்காவில் இருந்தபடியே ட்விட்டர் ஸ்பேசஸ் மூலம் மாநில பாஜக நிர்வாகிகள்,
தொண்டர்களிடையே உரையாற்றிய அண்ணாமலை, இன்று காலை 8.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் நேரடியாக தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயம் வந்த அண்ணாமலைக்கு பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்து, மேள தாளங்கள் முழங்க உற்சாகமாக வரவேற்பு வழங்கினர்.
தி.நகர் முழுவதும் “திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” என்று அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்த நிலையில், அண்ணாமலையைக் காண்பதற்கும், வாழ்த்து தெரிவிப்பதற்கும் ஆயிரக்கணக்கான பாஜகவினர் கமலாலயத்தில் குவிந்தனர். கட்சி மாவட்ட வாரியாக ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்களையும் சந்தித்து அவர்களிடம் வாழ்த்து பெற்ற அண்ணாமலை குழு புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார்.
நிகழ்வில் பாஜக மாநில நிர்வாகிகள் கரு.நாகராஜன், எஸ்.ஜி.சூர்யா, சூர்யா சிவா,
ஸ்ரீரங்கா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.