பொற்கோயிலில் இளைஞர் அடித்துக்கொலை: முதலமைச்சர் கண்டனம்

அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் தெய்வ நிந்தனையில் ( sacrilege) ஈடுபட்டதாக, இளைஞர் ஒருவரை பொதுமக்கள் அடித்துக் கொன்ற சம்பவத்துக்கு முதலமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் புகழ்பெற்ற பொற்கோயில் உள்ளது. இங்கு…

அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் தெய்வ நிந்தனையில் ( sacrilege) ஈடுபட்டதாக, இளைஞர் ஒருவரை பொதுமக்கள் அடித்துக் கொன்ற சம்பவத்துக்கு முதலமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் புகழ்பெற்ற பொற்கோயில் உள்ளது. இங்கு நேற்று (சனிக்கிழமை ) மாலை பிராா்த்தனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, சீக்கியா்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப் வைக்கப்பட்டுள்ள கருவறையின் மையப்பகுதிக்குள் குதித்த ஒருவர், அங்கு வைக்கப்பட்டிருந்த வைரம் பதிக்கப்பட்ட வாளை எடுத்து, அக்கிரமத்தில் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சி, நேரடியாக அங்கிருந்த டிவியில் ஒளிபரப்பானதால், பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பொற்கோயில் நிா்வாகக் குழுவினா், அவரைப் பிடித்து தங்கள் அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனா். அப்போது, கருவறைக்குள் குதித்து தெய்வ நிந்தனையில் ஈடுபட்டதாக, அவரை அங்கிருந்தவர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனா். இதில் அவர் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக அமிர்தரஸ் துணை காவல் ஆணையா் கூறும்போது, ‘‘உயிரிழந்தவர் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா். அவருக்கு 20-25 வயதுவரை இருக்கலாம்.அவா் எப்போது பொற்கோயிலுக்குள் நுழைந்தாா்? அவருடன் எத்தனை போ் இருந்தனா் என்பது குறித்து அறிய கண்காணிப்பு கேமராவை ஆய்ந்து வருகிறோம் என்று தெரிவித்தாா்.

இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்த பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜீத் சிங் சன்னி, இது குறித்து தீவிர விசாரணை நடத்துமாறு மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டாா்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.