நடைபயணத்தை தொடங்கி வைக்க மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வர உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
6 நாள் பயணமாக லண்டன் சென்ற மாநில தலைவர் அண்ணாமலை லண்டன் பயணத்தை நிறைவு செய்துவிட்டு சென்னை திரும்பினார். சென்னை
விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக சார்பில் 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள்
நிர்வாகிகள் அவரை உற்சாகமாக வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை கூறியதாவது: இங்கிலாந்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக சார்பில் பங்கேற்ற சென்றேன், பிரிட்டன் பாராளுமன்றத்தில் எம்.பி.க்களுடன் உரையாற்றினேன். இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக இந்தியா எடுத்த முடிவுக்கு இங்கிலாந்து தமிழர்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர். வடகிழக்குப்பகுதியில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக பிரதமர் செய்த பணிகளை இங்கிலாந்தில் உள்ள இலங்கை தமிழர்கள் பாராட்டுகிறார்கள். இங்கிலாந்தில் உள்ள தமிழர்க்ள பொருளாதாரத்தில் முன்னேறி உள்ளனர்.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சிதம்பரம் நடராஜர் கோயில் இருக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பு உள்ளது அறநிலையத்துறை அதிகாரி சிதம்பரம் நடராஜர் கோயில் செல்வதற்கு உரிமை உள்ளது. சிதம்பரம் கோயில் விவகாரத்தில் முன்னுக்குப் பின் முரணாக தி.மு.க.செயல்படுகிறது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களை வைத்து ஒவ்வொரு மாதமும் புதிய பிரச்சினைகளை தி.மு.க.அரசு உருவாக்குகிறது.
எனது நடைபயணத்தை தொடங்கி வைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வர உள்ளார். அவர் தேதிக்கு காத்திருக்கிறோம். இரண்டு நாட்களில் தேதி பற்றி தகவல் வரும். எனவே ஜூலை இரண்டாவது அல்லது மூன்றுவது வாரம் நடை பயணம் தொடங்க திட்டமிட்டுள்ளோம். மேலும் ஜூலை முதல் வாரத்தில் தி.மு.க. பைல்ஸ் -2 வெளியிடப்படும்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரை லண்டனில் நீங்கள் ரகசியமாக சந்தித்ததாக தகவல் வந்துள்ளதாக செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அவருடன் அண்ணாமலை வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.







