சென்னையில் ஜி20 கல்வி செயற்குழு மாநாடு நடைபெறுவதையொட்டி 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஜி-20 அமைப்புக்கு இந்த முறை இந்தியா தலைமை ஏற்றுள்ளது. ஜி-20 குழுவின் 18வது மாநாடு வருகிற செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளை மத்திய அரசு செய்து வருகிறது. இந்நிலையில் ஜி-20 மாநாடு நடைபெறுவதற்கு முன்னதாக அதன் துணை கூட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடக்கவுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புதுச்சேரியில் இன்று விஞ்ஞானிகள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய தேசிய அறிவியல் அககாடமியின் தலைவர் அசுதோஷ் சர்மா தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
அதன்படி சென்னையில் ஜி20 கல்வி செயற்குழு மாநாடு கூட்டம் வருகிற ஜனவரி 31-ம் தேதியிலிருந்து பிப்ரவரி 2-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் 29 வெளிநாட்டு பிரதிநிதிகளும் 15 பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இதனையொட்டி, நாளை 31ம் தேதியிலிருந்து பிப்ரவரி 2ம் தேதி வரை சென்னையில் டிரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடைவிதித்து சென்னை பெருநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது.