அம்பானி, அதானியால் ராகுல் காந்தியை எப்போதும் வாங்க முடியாது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
பண்டிகை கால விடுமுறைக்கு பிறகு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணத்தை டெல்லியில் உள்ள மார்கத் அனுமன் கோயில் பகுதியில் இன்று மீண்டும் தொடங்கினார். வழிநெடுகிலும் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில், தொடர்ந்து நடைபயணம் மேற்கொண்ட அவர், உத்தரப்பிரதேசத்திற்குள் நுழைந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவரை காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச மாநில பொது செயலாளர் பிரியங்கா காந்தி வரவேற்றார். அப்போது பேசிய பிரியங்கா காந்தி, அம்பானி அதானியால் ராகுல் காந்தியை வாங்க முடியவில்லை, எப்போதும் வாங்கவும் முடியாது என்று கூறினார். மேலும் அவர் உண்மை எனும் கவசத்தை எப்போதும் அணிந்து இருப்பதால் அவரை குளிர் ஒன்றும் செய்வதில்லை என்றும் தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் நடைபயணம் 3 ஆயிரம் கிலோ மீட்டரை கடந்துள்ள நிலையில், அவரது நடைபயணத்திற்கு சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.