28.3 C
Chennai
April 27, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

பொங்கலை முன்னிட்டு 16,932 சிறப்பு பேருந்துகள் – போக்குவரத்துத்துறை அறிவிப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி 16 ஆயிரத்து 932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து, சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைத்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனையடுத்து பொங்கல் பண்டிக்கைக்கு ஜனவரி 12 முதல் 3 நாட்களுக்கு 16 ஆயிரத்து 932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 6 ஆயிரத்து 300 பேருந்துகளுடன், 4 ஆயிரத்து 449 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 10 ஆயிரத்து 749 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பிற ஊர்களிலிருந்து 3 நாட்களுக்கும் 6 ஆயிரத்து 183 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சென்னையிலிருந்து கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் ரயில்நிலைய பேருந்து நிறுத்தம், பூவிருந்தவல்லி ஆகிய 6 இடங்களில் பேருந்து நிலையங்கள் செயல்படும் எனவும், சிறப்பு பேருந்துகளில் பயணிப்பதற்காக 12 முன்பதிவு மையங்கள் அமைக்கப்படும் எனவும், பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையிலுள்ள https://www.tnstc.in/home.html என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading