நாகையில் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பேரணி, சனாதான எதிர்ப்பு உறுதி மொழி நடைபெற்றது.
நாகப்பட்டினம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு சனாதன எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொறுப்பாளர் கதிர்நிலவன் தலைமையில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணி முக்கிய விதிகள் வழியாக வந்து நாகப்பட்டினம் அவுரி திடலில் நிறைவு பெற்றது.
—-ரெ.வீரம்மாதேவி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.