அருங்காட்சியகத்தில் அல்லு அர்ஜூன் மெழுகு சிலை! எங்கு தெரியுமா?

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன்.  இவர் நடித்த புஷ்பா திரைப்படம் உலகம் முழுவதும்…

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன்.  இவர் நடித்த புஷ்பா திரைப்படம் உலகம் முழுவதும் பெறும் வெற்றியை பெற்றது.  புஷ்பா படம் மூலம் பான் இந்தியா நடிகராக உயர்ந்துள்ள அல்லு அர்ஜுன் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார்.  தற்போது இதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில்,  நடிகர் அல்லு அர்ஜுனுக்கு துபாயில் உள்ள பிரபலமான மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.

பிரபலமானவர்களுக்கு மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலைகள் வைக்கப்படுவது வழக்கம்.  இந்த பட்டியலில் தற்போது தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனும் இணைந்துள்ளார்.    இந்த மியூசியத்தில் ஏற்கெனவே அமிதாப்பச்சன்,  ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய்,  ரன்பீர் கபூர் ஆகிய இந்தி நட்சத்திரங்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் தெலுங்கு நடிகர்கள் பிரபாஸ்,  மகேஷ்பாபு ஆகியோருக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  தனது மெழுகு சிலை திறப்பு விழாவில் நடிகர் அல்லு அர்ஜுன் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.