பிரபல நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தினமும் ஏராளமானோர் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 கோடியே 79 லட்சத்து 97 ஆயிரத்து 267 ஆக உயர்ந்திருக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த கொரோனா தொற்று பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. அரசியல்வாதிகள், திரைபிரபலங்கள் என பலருக்கும் இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பிரபல தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி ட்விட்டரில் தெரிவித்துள்ள அல்லு அர்ஜுன், ’கொரோனா பாதிப்பை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். சமீபத்தில் என்னை சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ரசிகர்கள் உள்பட யாரும் கவலைப்பட வேண்டாம். நான் நன்றாகவே இருக்கிறேன். வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்’ என்று கூறியுள்ளார்.
நடிகர் அல்லு அர்ஜுன் இப்போது புஷ்பா என்ற படத்தில் நடித்து வருகிறார். சுகுமார் இயக்கும் இந்தப் படத்தில் அவர் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். பகத் பாசில் வில்லனாக நடிக்கிறார்.