எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக ஜூன் 23 ஆம் தேதி அடுத்தக்கட்ட கூட்டத்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் அடுத்தக்கட்ட முயற்சியாக பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஏற்பாட்டில் ஜூன் 12 ஆம் தேதி பாட்னாவில் அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே) உள்ளிட்ட 16 கட்சிகள் கலந்து கொள்ளும் என தகவல் வெளியானது. இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் மட்டுமல்லாது தானும் கலந்துகொள்ள முடியாத நிலை இருப்பதால், ஜூன் 12 ஆம் தேதி நடைபெற இருக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பிலும் வலியுறுத்தபட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த வலியுறுத்தலை ஏற்று கூட்டத்தை ஜூன் 23 ஆம் தேதி நடத்துவதற்கு கட்சி தலைமைகளிடம் கருத்து கேட்டுள்ளார் நிதிஷ்குமார். கூட்டத்தில் கலந்துகொள்ள ஒப்புக்கொள்ளும் கட்சிகள் சார்பாக அதன் தலைவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என நிதிஷ்குமார் வலியுறுத்தியுள்ளார். ஜூன் 23 ஆம் தேதி காங்கிரஸ் உள்ளிட்ட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்வது இறுதியானால் திமுக தலைவர் ஸ்டாலினும் கலந்துகொள்வார் என திமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
- பி.ஜேம்ஸ் லிசா