ஜெயிலர் படம் பார்த்துவிட்டு இளைஞர்கள் சொகுசு காரில் வீடு திரும்பும் போது இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்ப்பட்டது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காரைக்கால் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கணபதி, அரவது நண்பர்களான வாசிம் முஷரப், சரவணன், அருண் அகியோர் காரைக்காலில் உள்ள திரையரங்கில் ஜெயிலர் திரைப்படம் சென்றுள்ளனர். டிக்கெட் கிடைக்காததால் மயிலாடுதுறைக்கு சொகுசு காரில் சென்று அங்கு உள்ள திரையரங்கில் திரைப்படம் பார்த்துவிட்டு இரவு முழுவதும் மயிலாடுதுறையில் இருந்து விட்டு காலையில் காரைக்கால் திரும்பியுள்ளனர்.
அப்பொது கோட்டுச்சேரி அருகே அதிவேகமாக வந்தபோது எதிரில் வந்த இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை அருகேயுள்ள வாய்க்காலில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் காரிலிருந்த கணபதி, வாசிம் முஷரப் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் இருசக்கர வாகனத்தில் வந்த கோட்டுச்சேரியை சேர்ந்த செல்வம் என்பவர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே அவரும் உயிரிழந்தார்.
இதில் காரில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அருண், சரவணனை மீட்டு போலீசார் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து கோட்டுச்சேரி போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.