32.5 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கர் வீட்டில், ரூ.15 லட்சம் பறிமுதல்

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி. பாஸ்கர் தொடர்புடைய இடங்களில் இன்று நடைபெற்ற சோதனையில் சுமார் 15 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக  லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

நாமக்கல் தொகுதியில் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டுவரை 10 ஆண்டுகள் எம்.எல்.ஏவாக இருந்தவர் கே.பி.பி.பாஸ்கர். நாமக்கல் மாவட்ட அதிமுகவில் முக்கிய அங்கம் வகிக்கும் இவர், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளராகவும் கருதப்படுகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று கே.பி.பி. பாஸ்கர் வீடு உள்பட அவர் தொடர்புடைய இடங்களில் இன்று அதிரடி சோதனை நடத்தினர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் அடுத்தடுத்து சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் இன்று சோதனை நடத்தினர். இந்த சோதனை அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த சோதனை குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது:-

நாமக்கல் சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் K.P.P.பாஸ்கர், அவரது பெயரிலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும், தான் மற்றும் தனது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் உள்ள நிறுவனங்களின் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளது சம்மந்தமாக அவர் மீது கடந்த 11.08.2022 ஆம் தேதியன்று நாமக்கல் மாவட்டம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண். 01/AC/2022 u/s 13(2) r/w 13(1)(e) of the Prevention of Corruption Act, 1988 மற்றும் 109 IPC & 12, 13(2) r/w 13(1) (b) of the Prevention of Corruption Act, 1988 as amended in 2018-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.

மேற்படி வழக்கு தொடர்பாக K.P.P.பாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள், அவரது அலுவலகங்கள், அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடம் உட்பட நாமக்கல்லில் 28 இடங்கள், திருப்பூரில் ஒரு இடம், மதுரையில் ஒரு இடம் ஆக மொத்தம் 30 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினரால் இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையில் பணம் ரூ.26,52,660/-, ரூ.1,20,000/ மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள், 4 சொகுசு கார்கள், பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், கடன் பத்திரங்கள், வங்கி கணக்குகள், 1.680 கிலோ எடையுள்ள தங்க நகைகள், 6.625 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள், 20 லட்சம் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சி முதலீடுகள், முக்கிய கணினி பதிவுகள் ஆகியவை கண்டறியப்பட்டு, வழக்கிற்கு தொடர்புடைய பணம் ரூ.14,96,900/- மற்றும் வழக்கு தொடர்புடைய 214 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இவ்வாறு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading