ஆதிபுருஷ் திரைப்படத்தில் ஆதாரமற்ற விஷயங்கள் கூறப்பட்டுள்ளதாகவும், அந்த திரைப்படம் ரசிகர்களை சென்றடையாதது ஏன் என்பது தொடர்பாக ராமாயண தொலைக்காட்சித் தொடரில் லட்சுமணனாக நடித்த சுனில் லஹரி விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த ஜூன் 16ஆம் தேதி ‘ஆதி புருஷ்’ திரைப்படம் வெளியானது. ராமாயண காவியத்தை மையமாக வைத்து எடுக்கபட்ட இந்த படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். ருத்தி சனோன், சையீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வெளியாவதற்கு முன்பே பலவித விமர்சனங்களை பெற்றது. குறிப்பாக, படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் மோசமாக உள்ளதாக விமர்சனம் எழுந்தது. படம் நல்ல வசூலை பெற்றாலும் தடை செய்யக்கோரி பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. குறிப்பாக, படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் மோசமாக உள்ளதாக விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் 80களின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் லக்ஷ்மணனாக நடித்த சுனில் லஹரி ஆதிபுருஷ் படத்தின் சரிவு தொடர்பாக மீண்டும் மனம் திறந்துள்ளார்.
“ஆதிபுருஷ் ரசிகர்களின் உணர்ச்சிகளை தொட தவறிவிட்டது. படத்தில் ஆதாரமற்ற பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. அனுமன் வெறும் பக்தன் அல்ல, கடவுள். ‘தயவுசெய்து பார்வையாளர்களின் உணர்வுகளுடன் விளையாடாதீர்கள்’என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். கதாபாத்திரங்கள் கூட சரியாக வரையறுக்கப்படவில்லை. ராமாயணம் எங்கள் நரம்புகளில் வாழ்கிறது. எதையாவது கொச்சைப்படுத்தி வெற்றி பெற முடியாது.
ராமாயணம் முதன்முதலில் ஒளிபரப்பப்பட்டபோது ஒரே ஒரு டிவி சேனல் இருந்தது. ஆனால் 2020இல் மீண்டும் இராமாயணம் ஒளிபரப்பட்டபோது 300 சேனல்கள் இருந்தன. ஓடிடி மற்றும் சமூக ஊடகங்களும் இருந்தன.. ஆனால் அதனை தாண்டி மக்கள் அதனை கொண்டாடினர். அதிக பார்வையாளர்களை சென்றடைந்தது. இராமயணத்தில் நடித்த அனைவரும் வாரணாசி சென்ற போது எங்களை காண சுமார் 10 லட்சம் கூடினர்” என சுனில் லஹரி தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.