வந்தியத்தேவனாக நடித்தபின் இன்ஸ்டாகிராமில் அதிகம் மெசேஜ் வருகிறது – நடிகர் கார்த்தி

வந்தியத்தேவனாக நடித்தபின் இன்ஸ்டாகிராமில் அதிகம் மெசேஜ் வருகிறது  என பொன்னியின் செல்வன் படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிய பொன்னியின் செல்வன்…

வந்தியத்தேவனாக நடித்தபின் இன்ஸ்டாகிராமில் அதிகம் மெசேஜ் வருகிறது  என பொன்னியின் செல்வன் படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிய பொன்னியின் செல்வன் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் உருவான இப்படம், புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. பொன்னியின் செல்வன் முதல் பாகம், ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வெற்றிப் படமாகவே பொன்னியின் செல்வன் முதல் பாகம் கருதப்படுகிறது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. இதனிடையே கடந்த 20 ஆம் தேதி, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் பாடலான ‘அக நக’ பாடல் வெளியானது. ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள இந்த பாடல், யூடியூப் ட்ரெண்டிங்கிலும் இடம்பெற்றுள்ளது.

பொன்னியின் செல்வன் 2 படத்தின் போஸ்டர்களை வெளியிட்டு பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா  29.03.2023 அன்று நடைபெறும் என்று படக்குழு  ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும் இந்த இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பெரியமேட்டில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், நேற்று மாலை 6 மணிக்கு துவங்கி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுடன் திரைத்துரையினர் பலர் கலந்து கொண்டனர். குறிப்பாக உலகநாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி தெரிவித்ததாவது..

கோவிட் முடிந்து திரையரங்குகளில் சென்று படம் பார்ப்பது அத்தனை மகிழ்ச்சியாக உள்ளது. பொன்னியின் செல்வன் மிகப் பெரிய  சாதனைகளை செய்துள்ளது. நான் கைதி படப்பிடிப்பில் இருந்தபோது மணிரத்னம் அலுவலகத்தில் இருந்து போன் வந்தது.

வந்தியத்தேவனாக நடிக்கிறீயா என்றார். ஓகே சொல்லிவிட்டு மனதிற்குள் மகிழ்ச்சியாக இருந்தது. சிவாஜி வசனம் எல்லாம் மனதில் ஓடியது என்று பேசிக்காட்டினார். அவர் சொன்னதை மட்டும் செய்தால் போதும். அதிகமாக செய்யக்கூடாது. வந்தியத்தேவனாக நடித்தபோது இன்ஸ்டாகிராமில் அதிகம் மெசேஜ் வருகிறது.” என கார்த்தி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.