விடுதலை காற்றை சுவாசிக்கும் பேரறிவாளனுக்கு வாழ்த்துகள் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு, இன்று காலை பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது. அப்போது, ‘பேரறிவாளன் விடுதலை’ என்ற செய்தியை கேட்ட பேரறிவாளனின் தயார் ஆனந்த கண்ணீரில் பேரறிவாளனை கட்டி தழுவி தன்னுடையை மகிழ்ச்சியை வெளிபடுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது பேட்டியளித்த பேரறிவாளனின் தயார் அற்புதம்மாள், உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். மேலும், இந்த தீர்ப்பு அனைவருக்கும் கிடைத்த வெற்றி எனவும் நெகிழ்ச்சிபடக் கூறினார். அதனைத் தொடர்ந்து பேசிய பேரறிவாளன், அரசும், குடும்பமும், நண்பர்களும் தனக்கு முழு ஆதரவு அளித்ததாக குறிப்பிட்டார்.
இந்நிலையில், தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 31 ஆண்டுகாலமாக சிறையிலிருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது வரலாற்றில் இடம்பெற்றுள்ள தீர்ப்பு என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பேரறிவாளன் விடுதலை 494-வது வாக்குறுதியாக திமுகவின் தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்டது என கூறினார்.
அண்மைச் செய்தி: ‘நான் கொஞ்சம் மூச்சு விடனும்’ – விடுதலை குறித்து பேரறிவாளன் உருக்கம்
அப்போது, மாநிலத்தின் உரிமை இந்த தீர்ப்பின் மூலமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்த அவர், இதன்மூலம் ஆளுநர் செயல்படாத நேரத்தில் நீதிமன்றம் தலையிடும் என்றும் நீதியரசர் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார். அப்போது, மாநில அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்பது மேலும் மேலும் உறுதியாகியுள்ளது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், விடுதலை காற்றை சுவாசிக்கும் பேரறிவாளனுக்கு வாழ்த்துகள் எனவும், எந்த எல்லை வரை செல்லமுடியுமோ, அந்த எல்லை வரை சென்றுள்ளார் அற்புதம்மாள் என தெரிவித்தார். மேலும், நீதிமன்றத்தின் முழு விபரம் வந்தவுடன் சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி 6 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.